×

மராட்டியத்தில் பெய்துவரும் தொடர் மழை: ஜூன் 1-ம் தேதியில் இருந்து இதுவரை 76 பேர் பலி

மும்பை: மராட்டியத்தில் பெய்துவரும் தொடர் மழை காரணமாக ஜூன் 1-ம் தேதியில் இருந்து இதுவரை 76 பேர் பலியாகியுள்ளனர்.

மராட்டியத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் பருவமழைக்காலம் தொடங்கியது. இதில் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ந் தேதி வரை மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதையடுத்து மும்பை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதேபோல் ராய்காட், ரத்னகிரி, சத்தாரா, கோலாப்பூர் ஆகிய மாவட்டங்களில் நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களில் மாற்றப்பட்டுள்ளனர்.  

இந்நிலையில் மராட்டியத்தில் கடந்த மாதம் முதல் மழைக்கு 76 பேர் பலியாகியுள்ளனர். இதில் கடந்த சனிக்கிழமை மட்டும் 9 பேர் பலியானார்கள். இதில் வார்தா மாவட்டத்தில் 4 பேர், கட்சிரோலியில் 3 பேர், நான்தெட், சிந்துதுர்க்கில் தலா ஒருவர் உயிரிழந்தார்.

Tags : Maratham , Incessant rains in Maharashtra: 76 people have died since June 1
× RELATED அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ள அரசு...